அறம்:
அறம் செய்ய செய்ய அன்பு ஓங்கும். அன்பு ஓங்க அருள் கூடும். அருள் அன்பின் குழந்தைப் போல் அங்கே வந்து தழுவும். அருள் வருமானால் அது தவத்தில் கொண்டு சேர்க்கும். தவத்தில் உயிர் சேருமானால் அது உயிரை சிவத்தில் கொண்டு சேர்த்து விடும். சிவம் தான் அறவிடையின் மேல் எழுந்தருளுவதாயிற்றே! அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவது காண்க. இதையே திருமூலரும் வலியுறுத்துகிறார்.
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
தருமம் என்ற வடசொல்லின் பொருள் அறம் என்ற தமிழ்ச் சொல்லின் ஒரு கூறுதான். முழுமையான இணை என்று கூறிவிட முடியாது. பிற மொழி வேதங்களில் இப்பகுப்பைக் காண இயலாது.
இரிக் வேதம் – துதிப்பாடல்கள்
யசூர் வேதம் – யாகம் செய்யும் செய்முறை
சாம வேதம் – யாகததில் பாடப் பெறும் இசையைக் கூறுவது
இவற்றிற்கும் அறத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை அறிஞர்கள் ஒப்புவர். இதையே புறநானூற்றில் காண்க.
சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்
அறத்து வழிபடூஉம் தோற்றம் போல – 31
- அறத்தமிழ் வேதத் தொகுப்பே பதினொன் கீழ்க்கணக்கு நூல்கள் என்று ஆன்றோர்கள் காட்டி அருளியுள்ளனர்.
- வடமொழியில் தருமம் – வாழ்நெறியைக் குறித்தது. உதாரணம் – வருணாசிரம தருமம்.
- அறம் ஒன்றல்ல 32 என்பது தமிழர் கண்டு காட்டியது. அறம் என்ற சொல் அறவாழ்வு என்று வாழும் முறையைக் குறிப்பதானாலும் தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகிவிடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறமாகும் (Ethics). தனது நன்மையை விட்டுக் கொடுத்து பிறர் நன்மையைப் போற்றி, இந்நெறி முறையில் சற்றும் பிறழாது நேரிய முறையில் வாழும் நெறியையே குறிக்கும். இதையே வாழ்வாங்கு வாழ்தல் என்று வள்ளுவர் காட்டினார்.
- பணம் கொடுப்பது மட்டும் அறம் அல்ல. அதனால் தான் ‘அரசியல் பிழைத்தோர்க்கும் அறம் கூற்று ஆகும்’ என்றது சிலப்பதிகாரம். போரிலேயே அறம் உண்டு. அறப்போர் என்பர் வாழ்கின்ற துறைகள் அனைத்திலும் அறத்தை காட்டியவை அறநூல்கள்.
அறநூல்கள் எது ?
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும் பெயர் விளக்கம்:
நாம் பிறவிக்கு வருவது விடுமுதல், வாழ்க்கை என்பது வரவு. வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு; செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம். இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு. அதனால் அறநூல்கள் கீழ்க் கணக்கு நூல்கள் எனப்பட்டன. இதையே அப்பர் தம் தேவாரத்தில் ‘எழுதும் கீழ்க் கணக்கு இன்னம்பர் ஈசனே’.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எவைஎவை என்று பழம்பாடல் கூறுகிறது.
நாலடி நான்மணி, நால் நாற்பது ஐந்திணைமுப்
பால், கடுகம், கோவை, பழமொழி மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியுடன் ஏலாதி என்பனவே
கைந்நிலைய ஆம் கீழ்க் கணக்கு.
தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
- தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
- ஆன்மிகத் துறையிலும், அரசியல் துறையிலும், பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்கு புறப் பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
- தமிழர்களின் பண்பாட்டை அறிவதற்கு, நம்வாழ்க்கைக்கு வழி காட்ட இவை சிறந்த கருவிகளாகும்.
- இவை யாவும் வெண்பாவினால் பாடப்பட்டவை காலம் கி.பி. 2-6.
- இத்தொகுப்பில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மட்டுமின்றி இனம் பற்றி பிற்காலத்து நீதி நூல்களும் சேர்க்கப்பட்டன.
- ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், கல்வி ஒழுக்கம், மூதுரை, நல்வழி, உலக நீதி, வெற்றி வேற்கை, நீதிநெறி விளக்கம், நன்னெறி, நீதிவெண்பா, அறநெறிச்சாரம் என்ற பிற ஆசிரியர்களின் நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
- பொது வேதம் – மேற்கண்ட நூல்கள் பொது எனலாம். சிறப்பு வேதம் – பன்னிரு திருமறை மற்றும் திவ்யப் பிரபந்தம் சிறப்பு எனலாம்.
அறத்தமிழ் வேதம்
ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்
மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்
பல புதிய சிறப்புச் செய்திகளை குறிப்புரையாக, மேற்கோள் உரையாக அனைத்து நூற்களுக்கும் ஆசிரியர் அணிந்துரை அளித்துள்ளார். இதன் மூலம் நூல் உள்ளே நாம் நுழைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவற்றில் இருந்து சில சிறப்புச் செய்திகள்:
- தருமம் என்ற வடசொல்லின் பொருள் அறம் என்ற தமிழ்ச் சொல்லின் ஒரு கூறு தான். இதனாலேயே இதை இணை என்று கூறி விட முடியாது.
அறம் —> அன்பிலும்
அன்பு —> அருளிலும்
அருள் —> தவத்திலும்
தவம் —> சிவத்திலும்
சேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவதும் காண்க. இதையே திருமூலர்
வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே
என்றார்.
வேதத்தின் அடிப்படைக் கூறு அறம் என்று கொண்டது தமிழ் வேதம் ஒன்றே! இதையே புறநானூற்றில்
சிறப்புடை மரபில் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – 31
என்று வருகிறது.
அறம்: தனக்கு நன்மை என்பதே சமூகத்தில் பிறர்க்கு ஊறாக ஆகி விடக்கூடாது என்று எண்ணி வாழ்வதே அறம். ஆங்கிலத்தில் Ethics என்பர். இதையே திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்தல் என்ற காட்ட அதையே தமிழர் கொண்டனர்.
கீழ்க்கணக்கு நூல்கள்: 1. நாம் பிறவிக்கு வருவது – முதல், 2. வாழ்க்கை என்பது வரவு. 3. வாழ்க்கையில் அறத்தொடு வாழச் செய்யும் முயற்சி செலவு 4. செலவு போக நமக்குக் கிடைப்பது இலாபம். 5. இதில் நிகரமாக நிற்கும் அறப்பயனே நமது இருப்பாகிய கீழ்க்கணக்கு. அதனால் அறநூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்பட்டன. இவையே மக்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நூல்கள் என்று கூறலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளைச் சிறந்த கருவிகள் எனலாம்.
- தமிழர் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும் ஆன்மிகத் துறையிலும் அரசியல் துறையிலும் பிற துறைகளிலும் தமிழர்கள் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும்.
- துறவறத்தில் நிகழும் புலனடக்கத்தை விட இல்லறத்தில் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் பிரிவுகளில் விளையும் துன்பத்தை அன்பினால் ஆற்றி அமையும் புலனடக்கமே மேலானது என்று தமிழ்ச் சான்றோர் போற்றினர்.
- ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.
- பெண்ணின் அன்பு ஆதரவு தேடுவது ஆணின் அன்பு ஆறுதல் தேடுவது.
- அறத்தான் வருவதே இன்பம்.
- ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர்.
- அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே – இலக்கணம்.
- திருக்குறள் அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பகுப்புகளை வெளிப்படையாக உடையது. அறம் ஒன்றே வீட்டிற்கு அடிப்படை அதனால் அறப்பகுதியிலேயே வீடு பற்றியும் அடக்கிக் குறிப்பாகவும் காட்டப்பட்டுள்ளது.
- ‘இடுநீற்றால் பை அவிந்த நாகம்’ – நாலடியார். அதாவது மந்திரித்த திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடும் என்கிறது.
- நல்ல மக்கள் இன்ன குடியில் தான் அல்லது இன்ன குலத்தில் தான் பிறப்பர் என்று வரையறை செய்ய முடியாது
- கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்றம்.
- மனத்தைக் கட்டுப்படுத்துபவனே தவம் புரிவதற்குத் தகுதியுடையவன்.
- ஒருவர் இறந்த பின் அவருடன் வருவது அவர் செய்த அறத்தின் பயனே.
- வெல்வது வேண்டில் வெகுளி விடல். – நான்மணிக்கடிகை.
- கலாச்சாரம் தூய தமிழ்ச்சொல் – கல்வியினால் வரும் ஒழுகலாறு.
- 8 நல்லொழுக்கங்களே ஆசாரத்துக்கு விதை – ஆசாரக்கோவை
- வினை விளையச் செல்வம் விளைவது போல் வினை இருந்தால் தான் செல்வம் கிட்டும் – சைவ சித்தாந்தம்.
- நாள் ஆராய்ந்து வரைதல் அறம்
- எது வனப்பு? ஒரு நூலுக்கு இசைந்த சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்சமூலம்.
- தூதுவரின் 6 தகுதிகளை வரையறை செய்கிறது – ஏலாதி.
- விருந்தினரை உபசரிப்பது எப்படி
- அறத்தால் ஆகும் பயன் மூன்று
- யார் யார் அறம் உரைக்கத் தகாதவர்கள் – இவை போன்ற செய்திகளை உடையது அறநெறிச்சாரம்.
மொத்தத்தில் மேற்கண்ட நூல்கள் அனைவரது வீடுகளையும் அலங்கரிக்க உதவும், வாழ்வை வழி நடத்தும், வழி காட்டும்.
தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர்! உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்!!